என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மல்லூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட என்ஜினீயர் தற்கொலை
Byமாலை மலர்8 July 2020 11:55 AM GMT (Updated: 8 July 2020 11:55 AM GMT)
மல்லூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
பனமரத்துப்பட்டி:
மல்லூர் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டி கிராமம் சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் பரஞ்ஜோதி. இவரது மகன் பிரதீப் ராஜ் (வயது 29). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பிரதீப் ராஜிற்கும், சேலம் ஓமலூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சேலம் வந்த பிரதீப் ராஜ் கடந்த 3 மாதமாக வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்தநிலையில் பிரதீப் ராஜின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை பிரதீப் ராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரதீப் ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில் பிரதீப் ராஜ் எழுதி வைத்திருந்த டைரியை போலீசார் கைப்பற்றினர். அந்த டைரியில், தற்போது உள்ள சூழ்நிலையில் தன்னால் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதற்கான பொருளாதார பணவசதி இல்லை. இதனால் எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதி வைத்திருந்தார். தொடர்ந்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மல்லூர் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டி கிராமம் சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் பரஞ்ஜோதி. இவரது மகன் பிரதீப் ராஜ் (வயது 29). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பிரதீப் ராஜிற்கும், சேலம் ஓமலூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சேலம் வந்த பிரதீப் ராஜ் கடந்த 3 மாதமாக வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்தநிலையில் பிரதீப் ராஜின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை பிரதீப் ராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரதீப் ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில் பிரதீப் ராஜ் எழுதி வைத்திருந்த டைரியை போலீசார் கைப்பற்றினர். அந்த டைரியில், தற்போது உள்ள சூழ்நிலையில் தன்னால் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதற்கான பொருளாதார பணவசதி இல்லை. இதனால் எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதி வைத்திருந்தார். தொடர்ந்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X