search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருவலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழப்பு

    திருவலம் அருகே சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்
    திருவலம்:

    திருவலம் அருகே உள்ள தாதிரெட்டிபள்ளியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 51), விவசாயி. இவர், நேற்று முன்தினம் உரம் வாங்குவதற்காக சேர்க்காடு கூட்ரோடு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, சாலையை கடக்க முயன்றார். அப்போது சேர்க்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென லட்சுமணன் மீது மோதியது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    Next Story
    ×