search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய கடைக்காரர்களுக்கு அபராதம்

    கூடலூர் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் பெட்டிக்கடை, செல்போன், எழுதுபொருட்கள் விற்பனை கடைகள், காலணி விற்பனைகடைகள், அழகு சாதன விற்பனை கடைகள் திறக்கப்பட்டு சமூக இடைவெளி இல்லாமலும், முககவசம் அணியாமலும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகத்திற்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய 25 கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கட்டுப்பாடுகளை மீறி கடைகளை திறந்து விற்பனை செய்தால் அவர்களது கடை உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×