search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சேலம் மாவட்டத்தில் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு

    சேலம் மாவட்டத்தில் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் கொரோனா தொற்றுக்கு 88 பேர் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று 99 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதாவது, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 23 பேர், கொளத்தூரில் 41 பேர், ஓமலூரில் 7 பேர், சேலம் கன்னங்குறிச்சி, சன்னியாசிகுண்டு பகுதிகளை சேர்ந்த 4 பேர், மேச்சேரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா 3 பேர், வீரபாண்டி, காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா 2 பேர், வாழப்பாடி, நங்கவள்ளி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் மற்றும் தர்மபுரியில் இருந்து சேலம் வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    மேலும் கர்நாடகாவில் இருந்து சேலம் வந்த 3 பேர், மராட்டியத்தில் இருந்து வந்த 2 பேர், ஒடிசாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 
    Next Story
    ×