என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் மாவட்டத்தில் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்4 July 2020 9:42 AM GMT (Updated: 4 July 2020 9:42 AM GMT)
சேலம் மாவட்டத்தில் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் கொரோனா தொற்றுக்கு 88 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று 99 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதாவது, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 23 பேர், கொளத்தூரில் 41 பேர், ஓமலூரில் 7 பேர், சேலம் கன்னங்குறிச்சி, சன்னியாசிகுண்டு பகுதிகளை சேர்ந்த 4 பேர், மேச்சேரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா 3 பேர், வீரபாண்டி, காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா 2 பேர், வாழப்பாடி, நங்கவள்ளி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் மற்றும் தர்மபுரியில் இருந்து சேலம் வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் கர்நாடகாவில் இருந்து சேலம் வந்த 3 பேர், மராட்டியத்தில் இருந்து வந்த 2 பேர், ஒடிசாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் கொரோனா தொற்றுக்கு 88 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று 99 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதாவது, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 23 பேர், கொளத்தூரில் 41 பேர், ஓமலூரில் 7 பேர், சேலம் கன்னங்குறிச்சி, சன்னியாசிகுண்டு பகுதிகளை சேர்ந்த 4 பேர், மேச்சேரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா 3 பேர், வீரபாண்டி, காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா 2 பேர், வாழப்பாடி, நங்கவள்ளி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் மற்றும் தர்மபுரியில் இருந்து சேலம் வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் கர்நாடகாவில் இருந்து சேலம் வந்த 3 பேர், மராட்டியத்தில் இருந்து வந்த 2 பேர், ஒடிசாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X