என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவைபோல் வடிவமைக்கப்பட்ட ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம்
Byமாலை மலர்2 July 2020 9:28 AM GMT (Updated: 2 July 2020 9:28 AM GMT)
தொற்று பரவாமல் தடுக்க கொரோனாவைபோல் வடிவமைக்கப்பட்ட ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனாவைபோல் வடிவமைக்கப்பட்ட ஆட்டோ, கை கழுவுதல் அவசியத்தை வலியுறுத்தி வாஷ்பேசின் போல் வடிவமைக்கப்பட்ட ஒரு மினி லாரி, முகக் கவசம் அணிவதை வலியுறுத்தி முகக் கவசம் போல் வடிவமைக்கப்பட்ட மற்றொரு மினி லாரி, தமிழக அரசின் சார்பில் அகண்ட ஒளித்திரை (எல்.இ.டி.டி.வி) மூலம் குறும்படம் திரையிட்டு பொதுமக்களிடையே கொரோனா தொற்று விழிப்புணர்வு பிரசாரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட வாகனங்கள் கிராமங்கள் தோறும் சென்று பொதுமக்களிடையே பிரசாரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று கொடியசைத்தும், ரிமோட்டில் பொத்தானை அழுத்தி அகண்ட ஒளித்திரையில் குறும்படத்தை திரையிட்டும் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சுப்பிரமணியம், சர்க்கரை ஆலை தலைவர் டி.ஆர்.ராஜேந்திரன், அம்பா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனாவைபோல் வடிவமைக்கப்பட்ட ஆட்டோ, கை கழுவுதல் அவசியத்தை வலியுறுத்தி வாஷ்பேசின் போல் வடிவமைக்கப்பட்ட ஒரு மினி லாரி, முகக் கவசம் அணிவதை வலியுறுத்தி முகக் கவசம் போல் வடிவமைக்கப்பட்ட மற்றொரு மினி லாரி, தமிழக அரசின் சார்பில் அகண்ட ஒளித்திரை (எல்.இ.டி.டி.வி) மூலம் குறும்படம் திரையிட்டு பொதுமக்களிடையே கொரோனா தொற்று விழிப்புணர்வு பிரசாரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட வாகனங்கள் கிராமங்கள் தோறும் சென்று பொதுமக்களிடையே பிரசாரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று கொடியசைத்தும், ரிமோட்டில் பொத்தானை அழுத்தி அகண்ட ஒளித்திரையில் குறும்படத்தை திரையிட்டும் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சுப்பிரமணியம், சர்க்கரை ஆலை தலைவர் டி.ஆர்.ராஜேந்திரன், அம்பா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X