search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை
    X
    குழந்தை

    பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று

    பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சுகாதார அதிகாரிகள் வீட்டை தனிமைப்படுத்தி குழந்தைக்கு வீட்டிலேயே சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாஜி கார்டன் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி அவருக்கு சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சோதனை குழாய் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் நேற்று அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதார அதிகாரிகள் அந்த வீட்டை தனிமைப்படுத்தி குழந்தைக்கு வீட்டிலேயே சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், மூகாம்பிகை நகரைச் சேர்ந்த 64 வயதுடைய தாம்பரம் 32-வட்ட தி.மு.க., பிரதிநிதிக்கு திடீர் உடல்நலக்குறைவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், அவர் சேர்க்கப்பட்டார்.

    அங்கு, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்நிலையில் அவரது மருத்துவ பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
    Next Story
    ×