search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

    மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கட்டப்பனை:

    கட்டப்பனை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 56). விவசாயி. நேற்று முன்தினம் இவர், அடிமாலி-குமுளி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஜோஸ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், கட்டப்பனையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் ஜோஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கட்டப்பனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×