search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    சிவகாசி அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலி

    சிவகாசி அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி மேற்கு கோபுரம்காலனியை சேர்ந்தவர் காசி. இவரது மகன் மாரீஸ்வரன் (வயது 23). என்ஜினீயரான இவர் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், மாரீஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளார். இதுகுறித்து காசி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×