search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கண்டமனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

    கண்டமனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்டமனூர்:

    பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 30). இவரது தாய், கண்டமனூர் அருகே ராஜேந்திரநகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று தனது தாயாரை பார்ப்பதற்காக கோபிநாத் அங்கு சென்றார். அப்போது அவரது தாயின் செல்போன் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்வதற்காக கண்டமனூர் வந்தார். ரீசார்ஜ் செய்த பின்னர் மீண்டும் கோபிநாத் ராஜேந்திரநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வெங்காயம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட கோபிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.

    இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த கோபிநாத்துக்கு, ஜான்சி பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சூழலில் கோபிநாத் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×