என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொகுசு விடுதியில் விபசாரம்- 3 பேர் கைது
Byமாலை மலர்19 Jun 2020 9:40 AM GMT (Updated: 19 Jun 2020 9:40 AM GMT)
கோட்டக்குப்பத்தில் சொகுசு விடுதியில் விபசாரம் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 துணை நடிகைகள் மீட்கப்பட்டனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம், ஆரோவில் பகுதிகளில் கடற்கரையையொட்டி ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இங்குள்ள ஒரு விடுதியில் விபசாரம் நடப்பதாக, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்குள்ள அறையில் விபசாரத்தில் ஈடுபடுத்தும் நோக்கில் பெண்களை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2 பெண்களை போலீசார் மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னையை சேர்ந்த துணை நடிகைகள் என்பதும், விடுதியில் மசாஜ் பயிற்சி அளிப்பதாக கூறி அவர்களை வரவழைத்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி உரிமையாளரான புதுவை சோலை நகரை சேர்ந்த சந்துருஜி, அவரது நண்பர் விஜயகுமார், விடுதி காவலாளி டெல்லியை சேர்ந்த அனில்ஜோசப் ஆகியோரை கைது செய்தனர். மீட்கப்பட்ட துணை நடிகைகள், வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா தொற்று ஊரடங்கு அமலில் இருக்கும்போது, சட்டவிரோதமாக இயங்கிய விடுதிக்கு கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம், ஆரோவில் பகுதிகளில் கடற்கரையையொட்டி ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இங்குள்ள ஒரு விடுதியில் விபசாரம் நடப்பதாக, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்குள்ள அறையில் விபசாரத்தில் ஈடுபடுத்தும் நோக்கில் பெண்களை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2 பெண்களை போலீசார் மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னையை சேர்ந்த துணை நடிகைகள் என்பதும், விடுதியில் மசாஜ் பயிற்சி அளிப்பதாக கூறி அவர்களை வரவழைத்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி உரிமையாளரான புதுவை சோலை நகரை சேர்ந்த சந்துருஜி, அவரது நண்பர் விஜயகுமார், விடுதி காவலாளி டெல்லியை சேர்ந்த அனில்ஜோசப் ஆகியோரை கைது செய்தனர். மீட்கப்பட்ட துணை நடிகைகள், வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா தொற்று ஊரடங்கு அமலில் இருக்கும்போது, சட்டவிரோதமாக இயங்கிய விடுதிக்கு கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X