search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மது, சாராயம் விற்க முயன்ற 4 பேர் கைது

    திருவண்ணாமலையில் மது, சாராயம் விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் சாராய வேட்டை நடத்தினர். அப்போது செய்யாறு தாலுகா கம்பன் நகரில் மது விற்க முயன்ற குமார் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 540 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தண்டராம்பட்டு தாலுகா நத்தகொல்லை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 53), அத்திப்பாடி கிராமத்தை சேர்ந்த சிவா (28), கோவிந்தன் (28) ஆகியோர் சாராயம் விற்க முயன்றதாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 365 லிட்டர் சாராயம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அத்திப்பாடி மலைப்பகுதியில் 300 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

    Next Story
    ×