search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ராமநாதபுரம் அருகே விஷம் குடித்து மதுரை தம்பதி தற்கொலை

    ராமநாதபுரம் அருகே விஷம் குடித்து மதுரை தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காந்தி நகர் ஓடைத்தோப்பு அருகே காட்டு பகுதியில் வயதான ஒரு ஆண், ஒரு பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மண்டபம் போலீசார் சம்பவம் இடத்திகு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பெத்தூரைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது73), இவரது மனைவி சாந்தி (64) என தெரிந்தது. கயிற்று கட்டில் தொழில் செய்து வந்த இவர்கள் குடும்ப பிரச்சினையால் வீட்டைவிட்டு வந்து வாழ்வாதாரம் இல்லாமல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.

    இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து முனியசாமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 
    Next Story
    ×