search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீலா ராஜேஷ்
    X
    பீலா ராஜேஷ்

    தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையை ஆராய குழு அமைப்பு- சுகாதாரத்துறை செயலர்

    கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆராய மருத்துவக்கல்வி இயக்குனரகம், பொது சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

    * இதுவரை உயிரிழந்தவர்கள் எதனால் உயிரிழந்தார்கள் என்பதை இந்த குழு ஆராயும்.

    * கொரோனா இறப்பு விகிதம், எண்ணிக்கை குறித்து அரசு வெளிப்படையாக தகவல்களை வெளியிடுகிறது.

    * கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.

    * அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக செவிலியர்கள் நியமிக்கப்படுவர்.

    * சென்னை அரசு மருத்துவமனைகளில் 1,563 சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்தியுள்ளோம்.

    * அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் உள்ளன. அதனை 10,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * தேவைக்கேற்ப மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவர் எனவும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறினார்.

    Next Story
    ×