என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் 78 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர்
Byமாலை மலர்8 Jun 2020 10:03 AM GMT (Updated: 8 Jun 2020 10:03 AM GMT)
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் 78 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்றதையொட்டி துறைமுக பகுதி படகுகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
ராமேசுவரம்:
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன் உள்பட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் அனுமதியை தொடர்ந்து 78 நாட்களுக்கு பிறகு பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று காலை 7 மணிமுதல் 40 விசைப்படகுகளில் சுமார் 250-க்கும் அதிகமான மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அதிக மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதுடன் இந்த மீனவர்கள் அனைவரும் இன்று(திங்கட்கிழமை) காலை மீன்களுடன் கரை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. விசைப்படகுகள் மீன் பிடிக்க சென்றதையொட்டி துறைமுக பகுதி படகுகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
பாம்பன் தென் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில் பாக்ஜலசந்தி கடலான வடக்கு கடல் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ராமேசுவரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் வருகிற 13-ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன் உள்பட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் அனுமதியை தொடர்ந்து 78 நாட்களுக்கு பிறகு பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று காலை 7 மணிமுதல் 40 விசைப்படகுகளில் சுமார் 250-க்கும் அதிகமான மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அதிக மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதுடன் இந்த மீனவர்கள் அனைவரும் இன்று(திங்கட்கிழமை) காலை மீன்களுடன் கரை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. விசைப்படகுகள் மீன் பிடிக்க சென்றதையொட்டி துறைமுக பகுதி படகுகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
பாம்பன் தென் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில் பாக்ஜலசந்தி கடலான வடக்கு கடல் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ராமேசுவரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் வருகிற 13-ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X