search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுத் தேர்வு
    X
    பொதுத் தேர்வு

    10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து அரசாணை வெளியீடு

    10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் வருகிற 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல் மார்ச் மாதம் 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்த பிளஸ்-1 தேர்வு வருகிற 16-ந்தேதியும், மார்ச் 24-ந்தேதி நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு எழுத இயலாதவர்களுக்கு 18-ந்தேதியும் நடக்கின்றன.

    இந்நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு  பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதில்,

    * பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் தேர்வு எழுதாமல், வீட்டுக்குச் செல்ல விரும்பினால், அந்த மாணவரை வீட்டுக்கு அனுப்பலாம்.

    * வீட்டிற்கு அனுப்பப்படும் மாணவர்கள் துணைத்தேர்வில் தேர்வுகளை எழுதிக்கொள்ளலாம்.

    * காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதி.

    * மாணவர்களுக்கு காலையிலும் மாலையிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

    * உடல்நிலை குறித்த விவரங்களை பதிவேட்டில் எழுத வேண்டும்.

    * அளவுக்கு அதிகமாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும்.

    * மாணவர்களில் யாருக்காவது, உடல் வெப்பம் 99 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியிருந்தாலும், ஒருவேளை, அந்த மாணவர் தயார் என்றால், தேர்வு எழுத தனி அறையில் அமர வைக்க வேண்டும். அவருக்கு தனி கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×