என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தீயணைப்புதுறை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி
மன்னார்குடி:
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிலுள்ள பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது.
மன்னார்குடி தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கொரோனா வைரஸை ஒழிப்பது குறித்த ஓவியங்களை ஆர்வமுடன் வரைந்தனர்.
மாணவர்களின் ஓவியங்களை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை திருவாரூர் மாவட்ட அலுவலர் அனுசியா, பார்வையிட்டார். மாவட்ட உதவி அலுவலர் பா.முருகையன், மன்னார்குடி நிலைய அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் மன்னார்குடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மண்டல மற்றும் மாநில அளவிலான ஓவிய போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்