என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவட்டார் பகுதியில் வெட்டுக்கிளிகளை அழிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
நாகர்கோவில்:
இந்தியாவில் வடமாநிலங்களில் ஒருவகை பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் ஒருவகை வெட்டுக்கிளிகளின் தாக்குதல் கண்டறியப்பட்டது. திருவட்டார் அருகே வெட்டுக்குழி, முளவிளை போன்ற பகுதிகளில் தோட்டங்களில் வாழை இலைகளை அவை அரித்து தின்றிருந்தன.
இதேபோல் ரப்பர் மரங்கள், ரப்பர் கன்றுகள், அன்னாசி தோட்டம், மர வள்ளிக்கிழங்கு, தேக்கு மரங்கள் போன்றவற்றிலும் ஏராளமான வெட்டுக்கிளிகள் இருப்பது தெரியவந்தது.
தகவல் அறிந்ததும் கலெக்டர் உத்தரவின் பேரில் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப் பாளர் திருகுமரன் மற்றும் வேளாண்துறை, தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் வந்து சோதனை செய்தனர். மேலும் வெட்டுக்கிளிகளை படமெடுத்து கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறைக்கு அனுப்பினர். பூச்சியியல் துறை ஆய்வில் அவை பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை சாதாரண வெட்டுக்கிளி எனத்தெரியவந்தது.
கேரள மாநிலத்தில் உள்ள காப்பி தோட்டங்களில் இருக்கும் இவ்வகை வெட்டுக் கிளிகள் காப்பி வெட்டுக் கிளி என்று அழைக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
இந்தநிலையில் இந்த வெட்டுக்கிளிகளை அழிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து நேற்று மாலை குமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் குண பாலன், வேளாண்துறை உதவி இயக்குனர் ஆறுமுகம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுந்தர் டேனியல் பாலஸ் மற்றும் வேளாண்மைதுறை தோட்டக்கலைதுறையினர் அந்த பகுதிக்கு சென்று வெட்டுக்கிளிகள் பரவலை தடுப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
வெட்டுக்கிளிகள் பரவலை வேம்பு கரைசல் மூலம் தடுக்கலாம். இதற்காக வேம்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்து ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி. கலந்து செடிகள் மற்றும் மரங்களில் தெளித்து செயல் முறை விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து அந்த மருந்தை விவசாயிகள் வாங்கி வெட்டுக்கிளிகள் பரவி உள்ள பகுதிகளில் தெளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்