search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் தகவல்"

    • தருமபுரியில் கல்வி கடன் வழங்கும் விழா நடைபெறுகிறது.இதில் மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    • தருமபுரி மாவட்ட  இளங்கலை மற்றும் முதுகலை சார்ந்த முதலாமாண்டு முதல் இறுதியாண்டு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் கல்வி கடன் பெற விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கருதப்படுகிறார்கள்.

    தருமபுரி:

    தருமபுரியில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் விழா வருகிற 17-ந் தேதி அன்று நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி பிரதான சாலை குண்டலப்பட்டியில் இயங்கி வரும் வருவான் வடிவேலன் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் வருகிற 17.11.2023-ம் தேதியன்று காலை 10 மணி முதல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

    விழாவில் வங்கியாளர்களும், அரசு அதிகாரிகளும், கல்லூரி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    கல்லூரியில் படித்து வரும் தருமபுரி மாவட்ட  இளங்கலை மற்றும் முதுகலை சார்ந்த முதலாமாண்டு முதல் இறுதியாண்டு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இம்மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டு வெளி மாவட்டத்தில் மற்றும் மாநிலத்தில் பயிலும் மாண வர்களும்  விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

    அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல், நர்சிங், பர்மஸி, கலை மற்றும் அறிவியல், கல்வியியல் படிக்கும்  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

    கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தங்கள் வசிப்பி டத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்விணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கலந்தாய்வு கடிதம், கல்லூரி சேர்க்கை கடிதம், நன்னடத்தை சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், போன்ற ஆவணங்கள் அளிக்க வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  கல்விக் கடன் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

    இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    • மருச்சுக்கட்டி தடுப்பணை நடப்பாண்டில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் புத்தேந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றுக் கொண்டார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இதுபோன்ற கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் பொழுது பொதுமக்கள் முழுமையாக கலந்து கொண்டு வளர்ச்சிக்கும், தனிநபரின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசு வழங்கும் திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும்.

    பொதுமக்கள் முக்கிய கோரிக்கையான மருச்சுக்கட்டி தடுப்பணை நடப்பாண்டில் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள் ளப்படும். அதேபோல் காவேரி கூட்டு குடிநீர் இணைப்பு வரும்வரை ஆழ்துளை கிணறு மூலம் தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் கூரியூர் கிராமத்திற்கு பஸ் நிறுத்தம், புதிய நியாய விலைக்கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், கிராம சாலைகள் சீரமைக்கவும், தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை மூலம் பொதுமக்களுக்கு தேவை யான திட்டங்களை கால தாமதமின்றி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியுடைய பயனாளிகளுக்கு மேல்முறையீட்டில் உரிமைத் தொகை பெற்று தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபா கரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தோசம், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை செல்வி, சேவுகப்பெருமாள், செயல் அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.41 கோடி மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல்துறை சார்பில் வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத் தின் கீழ் மானியவிலையில் வேளாண் எந்திரங்களை வழங்கி வருகிறது. இத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறுகியகாலத்தில் பயிர்சாகுபடி மேற்கொள்ள வும் வழி வகை செய்யப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் வேளாண் நிதிநிலை 2023-24 அறிக்கையின்படி சிறு, குறு விவசாயிகள் சிறிய எந்திரங்கள் மானியத்தில் பெற்று பயன் பெறும் நோக்கத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் பவர் டில்லர்கள், விசை களை யெடுப்பான் கருவி கள் ரூ.41.23 கோடி மானியத்தில் வழங்க இலக்குகள் நிர்ணயிக்கப் பட்டு 'உழவன் செயலி" மூலம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    தனிப்பட்ட விவசாயி களுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானிய அடிப்படையில் அதிகபட்சமாக பவர் டில்லர்களுக்கு 85 ஆயிரமும், விசைகளை யெடுப்பான்களுக்கு ரூ.65 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைசார்ந்த சிறுகுறுவிவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்பு தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீதம் கூடுதல் மானியம் மாநில அரசுநிதியில் இருந்து வழங்கப்படுகிறது.

    அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் 564 பயனாளிகளுக்கு ரூ.1081 லட்சம் மானியத்தில் ரூ.1613.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடப்பு கல்வியாண்டில் 8 மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • இந்த நிகழ்ச்சியில் மதுரை கலெக்டர் கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    மதுரை தியாகராஜர் கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.பி. கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மை யானது. தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழு மையையும், காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும் வளரும் தலைமுறையினருக்கு கொண்டு சேர்த்திடும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

    மதுரை மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 4 மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தில் 8 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

    வெங்கடேசன் எம்.பி. பேசுகையில், மொழியில் உயர்ந்த மொழி, தாழ்ந்த மொழி என எதுவும் இல்லை. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. நமது தமிழ்ச் சமூகம் 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுத்தறிவும், படிப்பறிவும் பெற்று கற்றறிந்த சமூகமாக வாழ்ந்தோம் என்பதை கீழடி அகழ்வாய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற பொருட்களின் ஆய்வின் அடிப்படையில் நாம் அறிய முடிகிறது.

    சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு தமிழ் சொற்கள் இன்றளவும் சாமானிய மக்களின் பேச்சு வழக்கில் உள்ளன. மதுரையை சுற்றி 20 கி.மீ சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் 20 இடங்களில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய கல்வெட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தகைய தொன்மையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகராக மதுரை விளங்குகிறது என்றார்.

    • துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • வெடிமருந்து குடோன்க ளை மாதம் இருமுறை ஆய்வு செய்ய வேண்டும்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு உற்பத்தி நிலையங்கள், பட்டாசு சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வெடிமருந்து குடோன்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வது தொடர்பாக , காவல்துறை, தீயணைப்பு-மீட்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    வருவாய்த்துறையினர் வெடிமருந்து குடோன்க ளையும், பட்டாசு விற்பனை நிலையங்களையும், மாதம் இருமுறை ஆய்வு செய்யுமாறும், ஆய்வின் ்போது காவல்துறை யினருக்கும் தகவல் தெரிவித்து அவர்களுடன் இணைந்து தணிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் ஆய்வின்போது, இருப்புப் பதிவேட்டில் உள்ளவாறு இருப்பு உள்ளனவா என்பதையும், உரிமம் வழங்கப்பட்ட அளவுக்குட்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற னவா என்பதையும், பட்டாசுகள் மற்றும் வெடி மருந்துகளை பாதுகாப்பான முறையில் இருப்பு வைத்து உள்ளனரா என்பதையும், அரசு விதிமுறைகளுக்குட் பட்டு பாதுகாப்பு நடவடிக் கைகள் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றதா என்பதை உறுதிபடுத்திடவும் அறிவு றுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் டி.ஆர்.கீதாராணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொ) மகாலிங்க மூர்த்தி, வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.2800 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் கூறினார்.
    • மக்களுக்கு எளிதாக சென்றடைய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ராமநாதபுரம்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் சென்னையில் நடை பெற்ற மாவட்ட கலெக்டர் கள், போலீஸ் சூப்பிரண்டு கள் மாநாட்டில் கலந்து கொண்டு ராமநாதபுரம் வந்த கலெக்டர் விஷ்ணு சந்திரன், நிருபரிடம் கூறிய தாவது:-

    தமிழக அரசின் அனைத்து திட்டப்பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். திட்டங் களை நிறைவேற்றுவதில் உள்ள குறைகளை தவிர்க்க வும், பணிகளை விரைவு படுத்தவும் உத்தரவிட்டார்.

    குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி பனை மர விதைகளை நட்டு வளர்க்கும் திட்டம் செயல்படுத்தபட்டு வருவதை பாராட்டி இந்த திட்டத்தை முழுமையாக வெற்றி பெற வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    ஏற்கனவே செயல் பாட்டில் உள்ள அனைத்து குடிநீர் வழங்கும் திட்டங்க ளும் ரூ.500 கோடி செலவில் பழுது பார்த்து சீரமைக்கப் பட்டு வருகிறது. அதன்படி பழுதடைந்த குழாய்கள், குடிநீர் தொட்டிகள் சீர மைக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர காவிரியில் இருந்து ரூ.2 ஆயிரத்து 800 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு என தனியாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த 2 திட்ட பணிகளும் நிறைவேற்றப் பட்டால் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் அடியோடு தீரும். இந்த 2 திட்டங்களையும் அடுத்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடித்து மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டுவர ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.இதனால் குடிநீர் திட்டப் பணிகள் விரைந்து செயல் படுத்தப்படும்.

    அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எளிதாக சென்றடைய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தாட்கோ மூலம் கடன் பெற்ற பயனாளிகள் அசலை முறையாக செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று தருமபுரி கலெக்டர் அறிவித்துள்ளார்.
    • தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் மூலம் தாழ்த்தப்பட்டோருக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனைத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12 ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தில் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் 31.12.2023 வரை செயல்படுத்தப்படும் எனவும் தாட்கோ, மாவட்ட மேலாளர்கள் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளபடி அசல் தொகையினை பயனாளிடமிருந்து வசூல் செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி, தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு முதலமைச்சரால் 25.8.2023 அன்று இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
    • குறித்த நேரத்தில் உணவு வழங்குவது குறித்தும், தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறு த்தப்பட்டுள்ளது.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்து வது தொடர்பான ஆலோச னைக்கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் கலெக்டர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமை ச்சரின் காலைஉணவுத்திட்டம் செயல்படுத்துவது தொட ர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் நோக்கமானது மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்க ப்படாமல் இருத்தலை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்கவும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிக்கவும் மற்றும் கல்வியை தக்க வைத்துக்கொள்ளவும், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை யை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காலை உணவுத்திட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் துறை, உணவுப்பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அலுவ லர்களை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட கண்கா ணிப்பு குழு அமைக்கப்பட்டு வாரந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    வட்டார அளவில் காலை உணவுத்திட்டத்தினை கண்காணிக்க உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் நல அலுவலர்கள், விரிவுஅலுவ லர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு மையங்களை பார்வையிட்டு வாரந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் 25.8.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 251 கிராம ஊராட்சிகளில் 797 பள்ளிகளில் பயிலும் 37,018 மாணவ, மாணவிகளுக்கும், 14 பேரூராட்சிகளில் 95 பள்ளிகளில் பயிலும் 4,555 மாணவ, மாணவிகளுக்கும், 6 நகராட்சிகளில் 59 பள்ளிகளில் பயிலும் 5,648 மாணவ,மாணவிகளுக்கும் சென்ட்ரலைசடு கிட்சன் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள 2 பேரூராட்சிகளில் 10 பள்ளிகளில் பயிலும் 784 மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் மாநகராட்சியில் உள்ள 120 பள்ளிகளில் பயிலும் 27,477 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 1,081 பள்ளிகளில் 75,482 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமை ச்சரின் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

    எனவே சமையலறையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், குறித்த நேரத்தில் உணவு வழங்குவது குறித்தும், தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறு த்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு) ஹேமலதா மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கிணறுகளையும் பாதுகாப்பாக மூடிவைத்திட வேண்டும்.
    • முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ள தாவது:- 

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவற்றினால் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் விலங்குகளுக்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. எனவே அனைத்து திறந்தவெளி கிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளையும் பாதுகாப்பாக மூடிவைத்திட வேண்டும்.

    பயன்படுத்தப்படாத குவாரிகளில் உள்ள பள்ளங்களில் குழந்தைகள், இளைஞர்கள்குளிப்பதை தடுத்திட வேண்டும். இதற்காக குவாரிகளை சுற்றிலும் வேலி அமைத்து எச்சரிக்கை பதாகைகளை வைத்திட குவாரி உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பொறுப்பேற்க வேண்டும். சாலைகளில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை உடனுக்குடன் மூடிடவும், பள்ளங்களை சுற்றிலும் தடுப்புகளை நிறுவிடவும் எச்சரிக்கை வாசகங்களை வைத்தி டவும், மேம்படுத்தப்பட்ட பிரதிபலிப்பான்களை வைத்திடவும் வேண்டும். பாதுகாப்பு விழிப்புணர்வைஅதிகரிக்க அபாயகரமான இடங்களுக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பயன்பாடற்றதிறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் பயன்பாடற்ற குவாரி குழிகளை கண்டறிந்து வருகின்ற 25- ந் தேதிக்குள் பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குறைந்த பட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
    • 3 முதல் 5 வருடங்கள் வரை சுய உதவி குழு, கூட்ட மைப்பு டன் பணியாற்றிய அனுபவம்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிய 1 வட்டாரத்திற்கு தலா 1 நபர் வீதம் 9 வட்டாரத்திற்கு 9 வட்டார வள பயிற்றுனர், பணியிடத்திற்கு பணி நிய மனம் செய்யப்பட வுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.07.2023 அன்று 25 வயது வயது நிரம்பியிருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

    3 முதல் 5 வருடங்கள் வரை சுய உதவி குழு, கூட்ட மைப்பு டன் பணியாற்றிய அனுபவம், சமுதாய பயிற்று னர், வாழ்வாதார திட்ட அனுபவம், முன்னாள் வட்டார வள பயிற்றுனர்கள், இதர அரசுதுறை சார்ந்த பயிற்றுனர் (முன்னாள் வட்டார வள பயிற்றுனர் களுக்கு அனைத்து காரணி களையும் கருத்தில் கொண்டு) பணியில் முன்னுரிமை வழங்கப்படும். எம்.எஸ். ஆபிஸ் தெரிந்து இருத்தல் வேண்டும். ஆன்ட்ராய்டு செல்போன் பயன்படுத்த தெரிந்திருத்தல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு படிக்க, எழுத மற்றும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

    விண்ணப்பங்கள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம ஊராட்சி சேவைமைய கட்டிடம், நிறை மதி (கிராமம்), நீலமங்கலம் (அஞ்சல்), கள்ளக்குறிச்சி மாவட்டம் 606 213 என்ற முகவரிக்கு 12.08.2023-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
    • ஆண்களுக்கு 8சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.2 கோடியும் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.2 கோடி அளவிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்க சிறப்பு லோன் மேளாக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியின் கிளைகளான விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி, விழுப்புரத்தில் 17-ந் தேதியும், திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கி,திண்டிவனத்தில் 18-ந் தேதியும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி,வானூரில்22-ந் தேதியும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, விக்கிரவாண்டியில் 24-ந் தேதியும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி,மரக்காணத்தில்25-ந் தேதியும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி செஞ்சியில் 29-ந் தேதியும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை பெறும். திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. மகளிருக்கான சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.கடன் விண்ணப்பங்களானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கியின் கிளைகளிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலும் கிடைக்கும். முகாமில் கலந்து கொள்ள வரும் முன்பே விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் , திட்ட அறிக்கை, ஒட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். எனவே,விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) இச்சிறப்பு லோன் மேளாக்களில் கலந்து கொண்டு கடன் உதவி பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • உபகர ணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது நட வடிக்கை மேற்கொள்ள ப்படும்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தங்கராஜ் விடுத்து ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கடலூர் மாவட்டத்தி லுள்ள 683 கிராம ஊராட்சி களிலும் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணி வருகிற செப்டம்பர் மாதம் முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணைப்பு 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்திற்கான ரேக், யூ.பி.எஸ். உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்ப ட்டு வருகிறது. இந்த உபக ரணங்கள் பொருத்தப்ப ட்டுள்ள அறை, சம்பந்த ப்பட்ட ஊராட்டசி மன்றத் தலைவரால் பராமரிக்க ப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான உபரகணங்களை பாதுகா த்திடவும், தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்திடவும், பி.ஓ.பி. பொறுத்தப்பட்டுள்ள அறையை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பெறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியில் மையங்களில் பொருத்த ப்பட்டுள்ள மின்கலம், மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைக ளாகும். மேற்கண்ட உபகர ணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நட வடிக்கை மேற்கொள்ள ப்படும் என எச்சரிக்கப்ப டுகிறது. இவ்வாறு கூறப்பட்டு ள்ளது.

    ×