என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிக போதைக்காக மதுவில் இருமல் மருந்தை கலந்து குடித்த காவலாளி பலி
Byமாலை மலர்1 Jun 2020 7:15 AM GMT (Updated: 1 Jun 2020 7:15 AM GMT)
அய்யப்பந்தாங்கல் அருகே அதிக போதைக்காக மதுவில் இருமல் மருந்தை கலந்து குடித்த காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை, அய்யப்பந்தாங்கல் லட்சுமி அவின்யூ பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (28). இவர் கே.கே. நகர் அடுத்த விஜயராகவபுரம் 3-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு கார்த்திகேயன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள காவலாளி அறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் கே.கே. நகர் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கார்த்திகேயன் அறையில் காலி மதுபாட்டில்கள் மற்றும் இருமல் மருந்து பாட்டில்கள் கிடந்தன. அதிக போதைக்காக இருமல் மருந்தை மதுவுடன் கலந்து குடித்ததில் கார்த்திகேயன் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இது தொடர்பாக கார்த்திகேயனுடன் தங்கி இருந்த மற்றொரு காவலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X