என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீரபாண்டி அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை
Byமாலை மலர்31 May 2020 2:04 PM GMT (Updated: 31 May 2020 2:04 PM GMT)
வீரபாண்டி அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரபாண்டி:
திருப்பூர் திருக்குமரன் நகர் கிழக்கு வீதி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சாந்தி (வயது 60). கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வீட்டில் கடந்த இரண்டு மாத காலமாக சாந்தி தங்கி வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருந்து வந்ததால் வேலையின்றி தவித்து வந்த மூதாட்டி மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் தனது இளைய மகன் சரவணனுக்கு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு தன்னைப் பார்க்க வருமாறு தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு மதியம் 3 மணியளவில் அண்ணன் வீட்டிற்கு வந்த சரவணன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து கதறி அழுதார்.
இதுகுறித்து திருப்பூர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X