search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் அருகே நிலப்பிரச்சினையில் மோதல்- 3 பேர் கைது

    திருவள்ளூர் அருகே நிலப்பிரச்சினையில் மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த திருவூரை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 49). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (30) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் வாசுதேவன் தொழுவூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அன்பழகன் மற்றும் அவரது உறவினர்களான சண்முகம் (45), முருகன் (36), சந்தோஷ் (28), சரவணன் (30), சதீஸ் (33) ஆகிய 6 பேரும் சேர்ந்து வாசுதேவனை வழிமறித்து உருட்டுக்கட்டையால் தாக்கினார்கள்.

    இதை தடுக்க வந்த வாசுதேவனின் உறவினரான ஆறுமுகம் (70) உள்பட 3 பேர் காயமடைந்தனர். பதிலுக்கு வாசுதேவன் தரப்பினர், அன்பழகன் தரப்பினரை தாக்கினர்.

    இந்த மோதல் குறித்து இரு தரப்பினரும் செவ்வாப்பேட்டை போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன், சண்முகம், முருகன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×