என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே நிலப்பிரச்சினையில் மோதல்- 3 பேர் கைது
Byமாலை மலர்31 May 2020 8:53 AM GMT (Updated: 31 May 2020 8:53 AM GMT)
திருவள்ளூர் அருகே நிலப்பிரச்சினையில் மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த திருவூரை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 49). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (30) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் வாசுதேவன் தொழுவூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அன்பழகன் மற்றும் அவரது உறவினர்களான சண்முகம் (45), முருகன் (36), சந்தோஷ் (28), சரவணன் (30), சதீஸ் (33) ஆகிய 6 பேரும் சேர்ந்து வாசுதேவனை வழிமறித்து உருட்டுக்கட்டையால் தாக்கினார்கள்.
இதை தடுக்க வந்த வாசுதேவனின் உறவினரான ஆறுமுகம் (70) உள்பட 3 பேர் காயமடைந்தனர். பதிலுக்கு வாசுதேவன் தரப்பினர், அன்பழகன் தரப்பினரை தாக்கினர்.
இந்த மோதல் குறித்து இரு தரப்பினரும் செவ்வாப்பேட்டை போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன், சண்முகம், முருகன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X