search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி
    X
    திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்

    திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கரூா் மாவட்ட ஆட்சியரை தகாத வார்த்தைகளால் பேசியதாக அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

    இந்நிலையில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுதாக்கல் செய்ய வேண்டும். மேலும் கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில்  ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
    Next Story
    ×