என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் ரூ.15,128 கோடி முதலீடு- முதல்வர் முன்னிலையில் 17 நிறுவனங்கள் ஒப்பந்தம்
Byமாலை மலர்27 May 2020 5:26 AM GMT (Updated: 27 May 2020 5:26 AM GMT)
வெளிநாடுகளைச் சேர்ந்த 17 நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.15,128 கோடி முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.
சென்னை:
இந்நிலையில் அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், சீனா, பிரான்ஸ், தைவான், கொரியா, உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 17 நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.15,128 கோடி முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் 9 நிறுவனங்கள் நேரடியாகவும், 8 நிறுவனங்கள் காணொலி வாயிலாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த தொழில் முதலீடுகளால் தமிழகத்தில் 47150 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் தொழில் நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் தொடங்க அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் சிறப்பு குழு ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், சீனா, பிரான்ஸ், தைவான், கொரியா, உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 17 நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.15,128 கோடி முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் 9 நிறுவனங்கள் நேரடியாகவும், 8 நிறுவனங்கள் காணொலி வாயிலாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த தொழில் முதலீடுகளால் தமிழகத்தில் 47150 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X