search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85-ஆக உயர்வு

    தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 83 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் புதிதாக 2 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

    திருவையாறு விளாங்குடியை சேர்ந்த 30 வயது வாலிபர். சென்னை குரோம்பேட்டையில் லாரி டிரைவராக பணியாற்றினார். இவர் கடந்த 22-ந்தேதி சென்னையில் இருந்து திருவையாறுக்கு வந்தார். அப்போது விளாங்குடி சோதனை சாவடியில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதேப்போல் தஞ்சை கீழவாசலை சேர்ந்த 58 வயது ஆண் சென்னையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அவர் சென்னையில் இருந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்காக கடந்த 23-ம் தேதி தஞ்சைக்கு காரில் வந்தார். அவருக்கும் விளாங்குடி சோதனை சாவடியில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து கீழவாசல் டபீர்குளம் சாலை பேரிகார்டு கொண்டு அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    புதிதாக பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×