search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

    விழுப்புரம் அருகே சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சாராய ஊறல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் ரேணுகா தேவி, சப்-இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது வீரபாண்டி கிராமம் அடுக்கனாமலை அருகில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்ததனர். விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த கோபி, மற்றும் 2 பேர் என தெரிய வந்தது. இவர்களிடம் நீலநிற பேரலில் 200 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் ஒரு பிளாஸ்டிக் குடத்தில் 40 லிட்டர் வி‌ஷநெடி சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து சாராய ஊறல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×