என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் சாமுண்டிபுரத்தில் 3 பேரை கத்தியால் குத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
Byமாலை மலர்24 May 2020 1:49 PM GMT (Updated: 24 May 2020 1:49 PM GMT)
திருப்பூர் சாமுண்டிபுரத்தில் 3 பேரை கத்தியால் குத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனியை சேர்ந்தவர் லிங்கமூர்த்தி (45). டிரைவர். இவருடைய மனைவி கண்ணகி (40). இவருடைய தங்கை மகன் கண்ணன் (35). இவரும் அதே காம்பவுண்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த ராம்பிரபு (24) என்ற வாலிபர் லிங்கமூர்த்தி வீட்டு காம்பவுண்டிற்குள் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார். இதுகுறித்து லிங்கமூர்த்தி ராம்பிரபுவிடம் கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து சென்ற ராம்பிரபு சிறிது நேரத்தில் பெரிய கும்பலுடன் லிங்கமூர்த்தி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் ராம்பிரபு அந்த கும்பலுடன் சேர்ந்து லிங்கமூர்த்தி, கண்ணகி, கண்ணன் ஆகியோரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த லிங்கமூர்த்தி, கண்ணன் ஆகியோர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து 15 வேலம்பாளையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ராம்பிரபுவின் மனைவி கீர்த்தனா (21), கீர்த்தனாவின் தாய் மீனா (43), மகேஸ்வரன், கண்ணன் உள்ளிட்ட 4 பேரையும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம்பிரபு உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராம்பிரபுவின் மாமனார் லட்சுமணனும் (52) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X