search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி

    பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது ஆலம்பாடி ஏரிக்கரையில் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் இருந்து கனகராஜ் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.

    இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கனகராஜ் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×