search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூரில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 2 வாலிபர்கள் கைது

    திருப்பூரில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் ராதாநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள மயான பகுதியில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை அழைத்துள்ளனர். உடனே 2 பேரும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பி சென்றனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் 2 பேருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. அவர்கள் மோட்டார் சைக்கிளில் அரிவாள், இரும்பு கம்பி போன்றவை இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த கபில் குமார் (20), டி. எஸ். ஆர். லேஅவுட்டை சேர்ந்த கிருஷ்ணகுமார் (23) என்பது தெரியவந்தது. மேலும் மயான பகுதியில் நின்று கொண்டு தனியாக வருபவர்களை அரிவாளால் தாக்கி அவர்களிடம் இருந்து நகை, பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்டதாக கூறினர். இதனையடுத்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×