என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முறைகேடாக மது விற்பனை- டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் பணி இடைநீக்கம்
Byமாலை மலர்22 May 2020 7:06 AM GMT (Updated: 22 May 2020 7:06 AM GMT)
சேலத்தில் முறைகேடாக மது விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
சேலம்:
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதேசமயம் மதுபாட்டில்கள் திருட்டு போகாமல் இருப்பதற்காக கடைகளிலிருந்து குடோன்களுக்கு மதுபாட்டில்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே கடந்த 7-ந் தேதி மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
அப்போது மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். அதேசமயம் மதுபானங்களை முறைகேடாக விற்பனை செய்தாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்றாலோ? டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் சேலம் கந்தம்பட்டி குடோனில் இருந்து மதுபாட்டில்களை ஊழியர்கள் அருகிலுள்ள வெள்ளக்கல்பட்டி மதுக்கடைக்கு கடந்த 6-ந் தேதி இரவு கொண்டு சென்றனர். அப்போது சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கு டாஸ்மாக் ஊழியர்கள் முறைகேடாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய வெள்ளக்கல்பட்டி டாஸ்மாக் கடையின் கூடுதல் மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், விற்பனையாளர்கள் பெருமாள், கண்ணன் உள்பட 10 பேரை பணி இடைநீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வேடியப்பன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதேசமயம் மதுபாட்டில்கள் திருட்டு போகாமல் இருப்பதற்காக கடைகளிலிருந்து குடோன்களுக்கு மதுபாட்டில்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே கடந்த 7-ந் தேதி மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
அப்போது மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். அதேசமயம் மதுபானங்களை முறைகேடாக விற்பனை செய்தாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்றாலோ? டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் சேலம் கந்தம்பட்டி குடோனில் இருந்து மதுபாட்டில்களை ஊழியர்கள் அருகிலுள்ள வெள்ளக்கல்பட்டி மதுக்கடைக்கு கடந்த 6-ந் தேதி இரவு கொண்டு சென்றனர். அப்போது சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கு டாஸ்மாக் ஊழியர்கள் முறைகேடாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய வெள்ளக்கல்பட்டி டாஸ்மாக் கடையின் கூடுதல் மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், விற்பனையாளர்கள் பெருமாள், கண்ணன் உள்பட 10 பேரை பணி இடைநீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வேடியப்பன் உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X