என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்-அமைச்சருக்கு, தேசிய தொற்று நோய் தடுப்பு நிறுவனம் பாராட்டு
Byமாலை மலர்20 May 2020 7:13 AM GMT (Updated: 20 May 2020 7:13 AM GMT)
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்-அமைச்சருக்கு, தேசிய தொற்று நோய் தடுப்பு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மனோஜ் முரேக்கர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக தடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் ஏற்படும் இறப்பு சதவீதமும் தடுக்கப்பட்டுள்ளது. கொரோனா இறப்பு சதவீதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது.
இந்தநிலையில் ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்தைச் சேர்ந்த தேசிய தொற்று நோய் தடுப்பு நிறுவனத்தின் இயக்குனரும், கொரோனா தடுப்பு தேசிய பணிக்குழுவைச் சேர்ந்த முன்னணி உறுப்பினருமான டாக்டர் மனோஜ் முரேக்கர் மற்றும் துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக தடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் ஏற்படும் இறப்பு சதவீதமும் தடுக்கப்பட்டுள்ளது. கொரோனா இறப்பு சதவீதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது.
இந்தநிலையில் ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்தைச் சேர்ந்த தேசிய தொற்று நோய் தடுப்பு நிறுவனத்தின் இயக்குனரும், கொரோனா தடுப்பு தேசிய பணிக்குழுவைச் சேர்ந்த முன்னணி உறுப்பினருமான டாக்டர் மனோஜ் முரேக்கர் மற்றும் துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X