என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுக சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
Byமாலை மலர்18 May 2020 9:05 AM GMT (Updated: 18 May 2020 9:05 AM GMT)
திருவாக்கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் உள்ள 300 குடும்பத்தினருக்கு, தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை வார்டு தி.மு.க. செயலாளர் எஸ்.கே.அன்பழகன் வழங்கினார்.
சேலம்:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள், முக கவசம், கபசுர குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மெய்யனூர் பகுதிக்குட்பட்ட 23-வது வார்டு கண்ணகி தெரு, திருவாக்கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் உள்ள 300 குடும்பத்தினருக்கு, தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை வார்டு தி.மு.க. செயலாளர் எஸ்.கே.அன்பழகன் வழங்கினார்.
இதில் பொதுமக்கள் அனைவரும் அரசின் அறிவுறுத்தலின்படி சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில் கட்சியின் பகுதி துணை செயலாளர் குமார், மாவட்ட பிரதிநிதி செட்டி சுப்பிரமணி மற்றும் ராமன், செங்கோடன், சீனிவாசன், தங்கராஜ், சுரேஷ்குமார், சுந்தரி, முருகானந்தம், சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X