search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா பாதித்த லாரி டிரைவர் உயிரிழப்பு

    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
    தூத்துக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த 34 வயது லாரி டிரைவர் நரம்பு பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அவர் தூத்துக்குடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவர் சென்னையில் இருந்து வந்தது தெரிந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று பாதித்திருந்தது கண்டறியப்பட்டது. அவர் உடனடியாக கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார்.

    இந்நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. வெண்டிலேட்டர் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.

    லாரி டிரைவர் உடலை சுகாதாரத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி மைய வாடிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.


    Next Story
    ×