என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் இருந்து நரிப்பையூருக்கு வந்த டிரைவருக்கு கொரோனா
Byமாலை மலர்15 May 2020 7:55 AM GMT (Updated: 15 May 2020 7:55 AM GMT)
சென்னையில் இருந்து நரிப்பையூருக்கு வந்த டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் பெரியநாயகிபுரத்தை சேர்ந்த 34 வயதுடைய நபர், சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய இவர் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி ஒருவர், அவரை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்ததில், அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்தநிலையில் ஊருக்கு திரும்பிய என்ஜினீயரிங் பட்டதாரி தனக்கும் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் மீண்டும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை செய்துள்ளார். தற்போது அவரை கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் நரிப்பையூர் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X