என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படும் கரும்புகள்- விவசாயிகள் வேதனை
Byமாலை மலர்14 May 2020 2:36 PM GMT (Updated: 14 May 2020 2:36 PM GMT)
கொரோனா ஊரடங்கு எதிரொலியாக குறைந்த விலைக்கு கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால் செலவு செய்ததை கூட ஈட்ட முடியவில்லையே என்று விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் பாபநாசம், அனவன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக, பெரும்பாலான விவசாயிகள் கரும்பு பயிரிடுவது வழக்கம். இந்த ஆண்டு அப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். 10 மாத பயிரான கரும்பினை தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவார்கள். மேலும் சிலர் கோடை காலத்தில் கரும்பு சாறு கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பும் வகையில், மார்ச், ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்து அனுப்புவார்கள். அதேபோன்று கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரும்பாலான விவசாயிகள் கரும்பினை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பினர். சில விவசாயிகள் கோடை காலத்தில் கரும்பு சாறு கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பும் வகையில், அறுவடை செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு, பல்வேறு தொழில்களும் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன.
எனினும் டீக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், குளிர்பான கடைகள் போன்றவற்றில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சாலையோரங்களில் கரும்பு சாறு கடைகள் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான வியாபாரிகள், கரும்பு சாறு கடைகளுக்கு கரும்பினை கொள்முதல் செய்வதற்கு முன்வரவில்லை.
இதனால் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு கரும்பை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். கடந்த முறை 15 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.250-க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு கட்டு கரும்பு ரூ.130-க்குதான் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஒரு ஏக்கர் கரும்பு பயிரிடுவதற்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ரூ.20 ஆயிரம் வரையிலும் செலவிட்ட விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர். செலவு செய்த பணத்தைகூட ஈட்ட முடியவில்லையே என்று வேதனை அடைகின்றனர்.
இதேபோன்று பாபநாசம் பகுதியில் ஏத்தன் ரக வாழை பயிரிட்ட விவசாயிகளும், அறுவடை செய்த வாழைக்கு போதிய விலை கிடைக்கப் பெறாமல் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கரும்பு, வாழை விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம், அனவன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக, பெரும்பாலான விவசாயிகள் கரும்பு பயிரிடுவது வழக்கம். இந்த ஆண்டு அப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். 10 மாத பயிரான கரும்பினை தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவார்கள். மேலும் சிலர் கோடை காலத்தில் கரும்பு சாறு கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பும் வகையில், மார்ச், ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்து அனுப்புவார்கள். அதேபோன்று கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரும்பாலான விவசாயிகள் கரும்பினை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பினர். சில விவசாயிகள் கோடை காலத்தில் கரும்பு சாறு கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பும் வகையில், அறுவடை செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு, பல்வேறு தொழில்களும் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன.
எனினும் டீக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், குளிர்பான கடைகள் போன்றவற்றில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சாலையோரங்களில் கரும்பு சாறு கடைகள் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான வியாபாரிகள், கரும்பு சாறு கடைகளுக்கு கரும்பினை கொள்முதல் செய்வதற்கு முன்வரவில்லை.
இதனால் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு கரும்பை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். கடந்த முறை 15 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.250-க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு கட்டு கரும்பு ரூ.130-க்குதான் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஒரு ஏக்கர் கரும்பு பயிரிடுவதற்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ரூ.20 ஆயிரம் வரையிலும் செலவிட்ட விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர். செலவு செய்த பணத்தைகூட ஈட்ட முடியவில்லையே என்று வேதனை அடைகின்றனர்.
இதேபோன்று பாபநாசம் பகுதியில் ஏத்தன் ரக வாழை பயிரிட்ட விவசாயிகளும், அறுவடை செய்த வாழைக்கு போதிய விலை கிடைக்கப் பெறாமல் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கரும்பு, வாழை விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X