search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    மாநகராட்சிகளில் கொரோனா தடுப்பு பணிகள் சவாலாக உள்ளன- எடப்பாடி பழனிசாமி

    மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் சவாலாக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் தொற்று பரவல் அதிகம் உள்ளது. பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளைவிட மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் சவாலாக உள்ளன. 

    தமிழகத்தில் அம்மா உணவகம் மூலம் தினமும்  7 லட்சம் மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதன்மூலம் யாருக்கும் உணவு இல்லை என நிலை இல்லை. 

    பொதுமக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். குறிப்பாக கடைகள் மற்றும் சந்தைக்கு செல்லும்போது தனி மனித இடைவெளி அவசியம். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×