என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநகராட்சிகளில் கொரோனா தடுப்பு பணிகள் சவாலாக உள்ளன- எடப்பாடி பழனிசாமி
Byமாலை மலர்29 April 2020 7:14 AM GMT (Updated: 29 April 2020 7:14 AM GMT)
மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் சவாலாக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் தொற்று பரவல் அதிகம் உள்ளது. பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளைவிட மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் சவாலாக உள்ளன.
தமிழகத்தில் அம்மா உணவகம் மூலம் தினமும் 7 லட்சம் மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதன்மூலம் யாருக்கும் உணவு இல்லை என நிலை இல்லை.
பொதுமக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். குறிப்பாக கடைகள் மற்றும் சந்தைக்கு செல்லும்போது தனி மனித இடைவெளி அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X