என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாரணாசியில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்21 April 2020 11:56 AM GMT (Updated: 21 April 2020 11:56 AM GMT)
வாரணாசியில் இருந்து திருவள்ளூருக்கு வந்த 125 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருச்சி, பெரம்பலூர் நாகை மாவட்டத்தை சேர்ந்த 125 பேர் கடந்த மாதம் வாரணாசிக்கு சுற்றுலா சென்றனர்.
ஊரடங்கு காரணமாக அவர்கள் குறிப்பிட்ட நாளில் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்தனர். பின்னர் அவர்கள் உத்தரபிரதேச மாநில அதிகாரிகள் ஒத்துழைப்புடன் 3 பஸ்களில் புறப்பட்டனர்.
கடந்த 17-ந்தேதி திருவள்ளூர் வந்த 125 பேரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கனகவல்லிபுரத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசு காவல் பயிற்சி மையத்தில் 125 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்காக ரேபிட் கிட் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் உள்ள வயது முதியவர்கள், இதர நோய் உள்ளவர்கள் 900 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
திருச்சி, பெரம்பலூர் நாகை மாவட்டத்தை சேர்ந்த 125 பேர் கடந்த மாதம் வாரணாசிக்கு சுற்றுலா சென்றனர்.
ஊரடங்கு காரணமாக அவர்கள் குறிப்பிட்ட நாளில் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்தனர். பின்னர் அவர்கள் உத்தரபிரதேச மாநில அதிகாரிகள் ஒத்துழைப்புடன் 3 பஸ்களில் புறப்பட்டனர்.
கடந்த 17-ந்தேதி திருவள்ளூர் வந்த 125 பேரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கனகவல்லிபுரத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசு காவல் பயிற்சி மையத்தில் 125 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்காக ரேபிட் கிட் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் உள்ள வயது முதியவர்கள், இதர நோய் உள்ளவர்கள் 900 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X