என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை வண்டியூரில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது
Byமாலை மலர்9 April 2020 1:48 PM GMT (Updated: 9 April 2020 1:48 PM GMT)
மதுரை வண்டியூரில் தூக்கத்தை கலைத்ததால் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
மதுரை:
மதுரை வண்டியூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் கட்டிட தொழிலாளி. இவரது சொந்த ஊர் கீழ ராங்கியம். இவரது மனைவி ராக்கு. மகன்கள் அருண்குமார், வீரமணி. வீரமணி துபாயில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அருண் குமாருக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முத்துக்குமார் நேற்று வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அருண்குமார் தனது தாய் ராக்குவுடன் வாக்கு வாதம் செய்தார். இதனால் முத்துக்குமாருக்கு தூக்கம் கலைந்தது. எரிச்சல் அடைந்த முத்துக்குமார் மகனை எச்சரித்தார். ஆனாலும் அருண்குமார் கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார், மண்வெட்டியால் அருண்குமாரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து முத்துக்குமார் அண்ணா நகர் போலீசில் சரணடைந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருண்குமார் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை வண்டியூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் கட்டிட தொழிலாளி. இவரது சொந்த ஊர் கீழ ராங்கியம். இவரது மனைவி ராக்கு. மகன்கள் அருண்குமார், வீரமணி. வீரமணி துபாயில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அருண் குமாருக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முத்துக்குமார் நேற்று வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அருண்குமார் தனது தாய் ராக்குவுடன் வாக்கு வாதம் செய்தார். இதனால் முத்துக்குமாருக்கு தூக்கம் கலைந்தது. எரிச்சல் அடைந்த முத்துக்குமார் மகனை எச்சரித்தார். ஆனாலும் அருண்குமார் கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார், மண்வெட்டியால் அருண்குமாரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து முத்துக்குமார் அண்ணா நகர் போலீசில் சரணடைந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருண்குமார் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X