search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 560 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

    ராணிப்பேட்டை:

    டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் 57 பேர் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 45 பேர் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    டெல்லியில் 11 பேர் உள்ளனர். ஒருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ளார். மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட 45 பேரில் 10 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் மேல்விஷாரம், அரக்கோணம், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பேருக்கு 38 வயது முதல் 55 வயதிற்குட்பட்டவர்கள். இவர்கள் 4 பேரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
    Next Story
    ×