என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பரிசோதனையில் உறுதி
Byமாலை மலர்29 March 2020 9:13 PM GMT (Updated: 29 March 2020 9:13 PM GMT)
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரத்யேக ‘வார்டில்’ வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ‘வார்டில்’ அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை உட்பட 3 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதில் அந்த குழந்தைக்கு பிறவி எலும்பு நோய் உள்ளதும், 66 வயது ஆணுக்கு நீண்ட நாள் சிறுநீரக கோளாறு இருந்ததும், 24 வயது வாலிபருக்கு நிமோனியா பாதிப்பால் ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
உயிரிழந்த இந்த 3 பேரின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் முன்னதாகவே எடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது கிடைத்துள்ளன.
இதுகுறித்து நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேரின் தொண்டை மற்றும் ரத்த மாதிரிகளின் முடிவுகளில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரத்யேக ‘வார்டில்’ வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ‘வார்டில்’ அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை உட்பட 3 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதில் அந்த குழந்தைக்கு பிறவி எலும்பு நோய் உள்ளதும், 66 வயது ஆணுக்கு நீண்ட நாள் சிறுநீரக கோளாறு இருந்ததும், 24 வயது வாலிபருக்கு நிமோனியா பாதிப்பால் ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
உயிரிழந்த இந்த 3 பேரின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் முன்னதாகவே எடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது கிடைத்துள்ளன.
இதுகுறித்து நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேரின் தொண்டை மற்றும் ரத்த மாதிரிகளின் முடிவுகளில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X