என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் ஆயுதங்களுடன் கைது
முள்ளக்காடு:
தூத்துக்குடி தாமோதர நகரை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகன் மனோ ரஞ்சித்குமார் (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று முத்தையாபுரத்தில் உள்ள அவரது நண்பர்களை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் முன்னால் 3 பேர் சென்று கொண்டிருந்த பைக்கை முந்தி சென்றுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து மனோ ரஞ்சித் குமாரை வழிமறித்து ஆயுதங்களை வைத்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதி வழியாக வந்த மற்றொரு வாலிபரை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். அதனை பார்த்து அந்த வழியாக வந்த தம்பதியினர் தட்டிக்கேட்டனர். அப்போது மர்ம நபர்கள் 3 பேரும் சேர்ந்து தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். மேலும் அந்தபகுதியில் வந்த லாரியை வழிமறித்து டிரைவரை தாக்கி அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது. இது குறித்து தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் எஸ்.பி.யின் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரைக்கு வழிப்பறியில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்றிருந்தவர்களை விரட்டி பிடித்தனர். பின்னர் அவர்களை முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தெர்மல் முத்துநகரை சேர்ந்த மதன்குமார் (22), பிரகாஷ் மற்றும் திரேஸ்புரத்தை சேர்ந்த முகுந்தன் (22) என்பதும், இவர்கள் மீது தென்பாகம், தெர்மல், சிப்காட் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்களது ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்