என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
Byமாலை மலர்18 March 2020 2:57 PM GMT (Updated: 18 March 2020 2:57 PM GMT)
கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி மாலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். நேற்று 32-வது நாளாக போராட்டம் நடந்து வந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருவதால் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் போராட்ட குழுவினரின் அவசரக் கூட்டம் நேற்று புது பள்ளிவாசலில் தலைவர் ஜெர்மன்அலி தலைமையில் நடைபெற்றது.
இதில் இன்று 18-ந்தேதி முதல் வரும் மார்ச் 31-ந்தேதி வரை கொரோனா நோய் எதிரொலியாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தகவலை போராட்ட குழு செயலாளர் அபூபக்கர் சித்திக் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X