search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்- மேலும் 2 வாலிபர்கள் கைது

    திருவாரூரில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜான்சன் (வயது 25). இவரது நண்பர்கள் மருதவனத்தை சேர்ந்த சதாசிவம் மகன் கார்த்திகேயன் (28). விஸ்வநாத் (18).

    இந்நிலையில் ஜான்சன் வீட்டிற்கு அடிக்கடி வரும் அவரது நண்பர்கள் கார்த்திகேயன் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அவரது வீட்டில் அருகில் உள்ள 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த சிறுமியை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    இதனால் அந்த சிறுமி 6 மாத கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் தன்னுடைய மகளின் நிலையை எண்ணி கதறி அழுதனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்ய சென்ற போது கார்த்திகேயன் போலீசில் சிக்கினார். ஜான்சன், விஸ்வநாதன் ஆகியோர் தப்பி ஓடி தலைமறைவாகினர். இதனையடுத்து கார்த்தியை கைது செய்த போலீசார் மற்ற 2 பேரை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை திருத்துறைப்பூண்டியில் பதுங்கி இருந்த ஜான்சானை போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து மதியம் குன்னலூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விஸ்வநாதன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த விஸ்வநாதனை திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×