search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்பு
    X
    பாம்பு

    கும்பகோணத்தில் பாம்பு கடித்து பேராசிரியர் உயிரிழப்பு

    கும்பகோணத்தில் பாம்பு கடித்து பேராசிரியர் இறந்த சம்பவம் கல்லூரி வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் ஆனந்தகுமார்.

    இவரது வீடு உடையார் பாளையம் வட்டம் மருதூராகும். சம்பவத்தன்று வீட்டிற்கு பின்புறம் சென்றபோது அங்கு சென்ற பாம்பு கடித்துள்ளது. இதனால் அவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து. உடல் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது

    பாம்பு கடித்து பேராசிரியர் இறந்த சம்பவம் கல்லூரி வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×