search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Professor death"

    ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பேராசிரியர் பலியானார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சீனி. இவரது மகன் கிருஷ்ணராஜ் (வயது 28). சென்னையில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.

    பொங்கல் விடுமுறைக்காக கிருஷ்ணராஜ் ஊருக்கு வந்தார். அவரை பார்க்க நண்பர் பிரதீப் (25) வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் பிரதீப்பை முறம்பு பகுதியில் உள்ள அவரது வீட்டில் விடுவதற்காக கிருஷ்ணராஜ் மோட்டார் சைக்கிளில் சென்றார். சங்கரன்கோவில் சாலையில் கோதைநாச்சியார்புரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியது.

    இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரதீப் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    விபத்து தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீசில் கிருஷ்ணராஜின் தந்தை சீனி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து காரை ஓட்டி வந்த தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த முருகேசன் (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    தவளக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி பேராசிரியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சென்னியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் வீரபாண்டியன் (வயது 23).

    இவர் புதுவை தவளக்குப்பம்- அபிஷேகப்பாக்கம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியர் வேலை பார்த்து வந்தார். பணிக்கு செல்ல வசதியாக அதே பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர், தவளக்குப்பத்தில் உள்ள ஏ.டி.எம். சென்டரில் பணம் எடுக்க வந்தார். அப்போது புதுவை- கடலூர் சாலையை கடந்து செல்ல முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக வீரபாண்டியன் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் வீர பாண்டியனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு வீரபாண்டியன் பரிதாபமாக இறந்து போனார்.

    புதுவை நோணாங்குப்பம் புதுநகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 70). சம்பவத்தன்று இவர் சைக்கிளில் வீட்டுக்கு செல்ல புதுவை- கடலூர் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ராமலிங்கம் படுகாயம் அடைந்தார். புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராமலிங்கம் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து போனார்.

    இந்த 2 விபத்துகள் குறித்தும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம், ஏட்டு புவனேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×