என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரக்கோணம் அருகே ரெயிலில் போலீஸ்காரர், டிக்கெட் பரிசோதகர் மோதல்
அரக்கோணம்:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் பழனி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.
அந்த ரெயிலில் சென்னையில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் திருத்தணியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது38) எஸ்.1 கோச்சில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் பயணம் செய்தார்.
அவரிடம் டிக்கெட் பரிசோதகர் செந்தில்குமார் டிக்கெட்டை கேட்டுள்ளார். ஆனால் சதீஷ்குமார் தான் போலீஸ்காரன் என கூறி அடையாள அட்டைகளை பரிசோதகரிடம் காண்பித்துள்ளார். அப்போது டிக்கெட் பரிசோதகர் எனக்கு இது தேவையில்லை, டிக்கெட் இருந்தால் காண்பிக்கவும் என கூறியுள்ளார்.
அப்போது இருவருக்கு மிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.
ரெயிலிலிருந்து இறங்கிய செந்தில்குமார், சதீஷ்குமார் இருவரும் கைகலப்பு குறித்து ரெயில்வே போலீசில் ஒருவர் மீது ஒருவர் புகார் மனு கொடுத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்