search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காதலி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை

    காதலி இறந்த துக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குள்ளனம்பட்டி:

    திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா டால்மியாபுரத்தை சேர்ந்த சாமிதுரை மகன் பிரசன்னகுமார் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிரியா என்பவரை காதலித்து வந்தார். இதனை அந்த பெண்ணின் பெற்றோர் கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த பிரசன்னகுமாரும், பிரியாவும் கடந்த மாதம் 19-ந்தேதி வி‌‌ஷம் குடித்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்தார்.

    சிகிச்சைக்கு பிறகு பிரசன்னகுமார் திண்டுக்கல் எம்.எம்.கோவிலூர் அருகேயுள்ள அட்சயா நகரில் உள்ள தனது அண்ணன் பிரேம்குமார் வீட்டில் தங்கி இருந்தார். காதலி இறந்த துக்கத்தில் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரசன்னகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×