என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
Byமாலை மலர்25 Feb 2020 10:11 AM GMT (Updated: 25 Feb 2020 10:11 AM GMT)
எமதர்மராஜன் கோவிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சிற்றம்பலம்:
தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் எமதர்ம ராஜனுக்கு தனிக்கோவில் உள்ளது. காலத்தால் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு கோவிலுக்கு சென்ற மர்ம மனிதர்கள், சுவாமி சன்னதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை தூக்கிச் சென்று, கோவிலின் அருகே உள்ள வயலில் போட்டு உண்டியலை திறந்து அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர் இந்த சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே போன்று ஒரு கொள்ளை சம்பவம் இந்த கோவிலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து திருச்சிற்றம் பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X