search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
    X
    மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    ஆம்பூர் அருகே போர்வெல் வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

    ஆம்பூர் அருகே போர்வெல் வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மிட்டாளம் அடுத்த குட்காத்தூரை சேர்ந்தவர் அரிவேல் (வயது 43) விவசாயி.

    இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தில் உள்ள போர்வெல் தற்போது பழுதடைந்தது இருந்தது.

    இந்நிலையில் போர்வெல்லை பழுது பார்க்க நரியம்பட்டை சோந்த மேத்யூ (43) அவரது மகன் சஞ்சய் (16), சந்தோஷ் (20) ஆகியோர் இன்று காலை வந்தனர்.

    போர்வெல் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டபோது போர்வெல் எந்திரம் விவசாய நிலத்தின் வழியாக சென்ற உயர் அழுத்த மின்ஒயரில் உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து மேத்யூ, சந்தோஷ், சதீஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் மேத்யூ உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் போர்வெல் வேன் தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த சந்தோஷ், சஞ்சய் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போர்வெல் பார்க்கும்போது மின் ஓயரில் உரசியதில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×