search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலி
    X
    பலி

    சுவாமிமலை அருகே மதகில் இருந்து கீழே விழுந்த விவசாயி பலி

    சுவாமிமலை அருகே மதகில் இருந்து கீழே விழுந்த விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள ஏராகரம் மேலத் தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் செந்தில்குமார் (வயது 37). விவசாயி.

    சம்பவத்தன்று இவர் அருகிலுள்ள பலவாறு மதகில் உட்கார்ந்து இருந்து கீழே இறங்கிய போது நிலை தடுமாறி விழுந்து விட்டார் . இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி பிரபாவதி கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×