என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வீரவநல்லூரில் மகன்-மகள் இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை
நெல்லை:
வீரவநல்லூரை அடுத்த அரிகேசவநல்லூரை சேர்ந்தவர் முத்துக் குமார் (வயது40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோமதி(32). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது பெண் குழந்தை இறந்துவிட்டது. அந்த சோகம் முடிவதற்குள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவர்களது ஆண் குழந்தையும் திடீரென இறந்துவிட்டது. இதனால் கணவன்-மனைவி இருவரும் மிகுந்த சோகத்திற்குள்ளாயினர். இதில் முத்துக்குமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
குழந்தைகள் இருவரும் இறந்துவிட்டார்கள் என்ற சோகத்தில் இருந்த முத்துக்குமார் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று வீட்டில் அவரது மனைவி இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீட்டிற்கு வந்த கோமதி தனது கணவன் தூக்கில் பிணமாக தொங்கு வதை பார்த்து அலறி துடித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து முத்துக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்